சூரரைப் போற்று படத்தில் நடித்த நடிகர் படம் பார்க்காமலேயே இறந்து போன சோகம் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.
Soorarai Pottru Abdhul Kalam : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப் போற்று என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சுதா கொங்கரா இயக்கி இருந்த இந்த திரைப்படத்தை திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சோகமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சூரரைப் போற்று படத்தில் அப்துல்கலாம் வேடம் ஒன்று இடம்பெறும். இந்த வேடத்தில் நடிக்க இருந்தவர் உடுமலை கலாம் என அழைக்கப்படும் ஷேக் மைதீன்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் பெரிய அளவில் படிப்பறிவு இல்லை என்றாலும் அப்துல் கலாம் கருத்துக்கள் மீது கொண்ட ஈர்ப்பால் தன்னை ஒரு அப்துல் கலாம் போலவே மாற்றிக் கொண்டார்.
இவர் சூரரைப்போற்று படத்தில் நடித்திருந்தாலும் அவரால் சூரரைப்போற்று திரைப்படத்தை பார்க்க முடியவில்லை. அதற்குள் மரணம் அவரை தழுவிக் கொண்டுள்ளது.
இதுகுறித்து ஷேக்மைதீன் அவர்களின் குடும்பத்தினர் வருத்தத்துடன் பேசியுள்ளனர். அவர் மிகவும் விரும்பும் மனிதர் அப்துல் கலாம். அவருடைய வேடத்தில் படத்தில் நடித்துவிட்டு அவரால் பார்க்க முடியவில்லை என்பது எங்களுக்கு வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
அதே போல் இந்த படத்தில் அப்துல் கலாமாக நடித்த ஷேக் மைதீன் அவர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பவர் விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நவீன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.