pubgi game
வீடியோ கேம் விளையாடுவதை தடுத்த தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Son killed father on angry stoping video game – கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சங்கர் குமார். அவரின் மகன் ரகுவீர் குமார்.

இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது எனவே வீட்டில் இருக்கும் இவர் வீடியோ கோம் குறிப்பாக பப்ஜி விளையாட்டை விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

இதை சங்கர் குமார் பலமுறை கண்டித்துள்ளார்.ஆனாலும் ரகுவீர் வீடியோ கேம் விளையாடுவது நிறுத்தவில்லை.

எனவே கோபம் அடைந்த சங்கர் குமார் தன் மகனிடம் இருந்த செல்போனை பறித்ததோடு, இன்டர்நெட் சேவையையும் முடக்கினார்.

இதனால் கடுமையான ஆத்திரமடைந்த ரகுவீர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வீட்டின் அறையில் பூட்டி வைத்துள்ளார். அதோடு தந்தை என்றும் பாராமல் குமாரின் உடலை மூன்று பாகங்களாக கொடூரமாக அறுத்து கொலை செய்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சங்கர் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ரவிக்குமார் மனநலம் பாதித்தவர் என்பதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பல கல்வி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.