கவினையும் லாஸ்லியாவையும் பற்றி கேள்வி கேட்டதற்கு சினேகன் கழுவி கழுவி ஊற்றியுள்ளார்.
Snehan Comment About Kaviliya : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த சீசனில் கவின், லாஸ்லியாவின் காதல் விவகாரம் படு மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. பலரும் ஒரு பெண்ணை ( சாக்ஷி அகர்வாலை ) காதலிப்பதாக கூறி விட்டு தற்போது லாஸ்லியா பின்னாடி திரிந்து கொண்டிருப்பது தான் காதலா என விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல் சீசன் போட்டியாளரான சினேகனிடம் ரசிகர்கள் சில கேள்விகளை கேட்டுள்ளனர். லாஸ்லியாவிடம் நீங்க சொல்ல விரும்புவது எது என கேட்டதற்கு சகிக்கல என சொல்லுவேன் என பதிலளித்துள்ளார்.
கவினிடம் என்ன சொல்வீர்கள் என கேட்டதற்கு போட்டி போட்டு ஜெயிக்க முடியாமல், மக்கள் உணர்வுகளுடன் விளையாடி ஜெயிக்க முயற்சிக்கும் நரி தந்திரத்தை அவர் விட்டுவிட வேண்டும் என கூறுவேன் என பதிலளித்துள்ளார்.
போட்டி போட்டு ஜெயிக்க முடியாமல், மக்கள் உணர்வுகளுடன் விளையாடி ஜெயிக்க முயற்சிக்கும் நரி தந்திரத்தை அவர் விட்டுவிட வேண்டும்#AskThalaivanSnehan#BiggBossTamil #BiggBossTamil3 https://t.co/hqEhqE8Qqz
— கவிஞர் சினேகன் (@Kavignar_Snehan) September 5, 2019
சகிக்க முடியவில்லை என்று கூறுவேன்#AskThalaivanSnehan https://t.co/bOQn6eDplU
— கவிஞர் சினேகன் (@Kavignar_Snehan) September 5, 2019