பிக் பாஸ் சினேகனின் கார் மோதி இளைஞர் ஒருவர் பலியானதால் அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்ததுள்ளது.
Snehan Car Accident : தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக தொடர்ந்து பல பாடல்களை எழுதி வருபவர் கவிஞர் சினேகன். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கூட பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
கடந்த 16ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் கவிஞர் சினேகன் காரில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிரில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி உள்ளது.
இருசக்கர வாகனத்தில் பயணித்த அருள் பாண்டியன் என்ற கடுமையான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனால் கவிஞர் சினேகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.