சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அதிவேகத்தில் இடம் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது சீமாராஜா படத்தை தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு  படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களை அடுத்து இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் மித்ரனும் பிரபல பத்திரிக்கைக்கு அளித்திருந்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

24 AM ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமூக கருத்து ஒன்றை மையமாக கொண்டு இப்படம் உருவாக இருப்பதாகவும் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வருடம் தொடங்கும் எனவும் மித்ரன் கூறியுள்ளார்.