Sivakarthikeyan Emotions on Kalaimamani Awards

சிவகார்த்திகேயன் கலைமாமணி விருதை வாங்கிய பிறகு தன் தாயிடம் கண்கலங்கி ஆசீர்வாதம் பெற்ற புகைப்படம் வெளியாகி உள்ளது.

Sivakarthikeyan Emotions on Kalaimamani Awards : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் மற்றும் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது திரையுலக பிரபலங்களான சிலருக்கு கலைமாமணி விருது வழங்குவதாக தகவல் வெளியாகியது.

இதில் ஒருவராக சிவகார்த்திகேயனும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விருதை வழங்கினார்.

விருதை வாங்கிய கையோடு சிவகார்த்திகேயன் தன் அம்மாவிடம் கொடுத்து கண்கலங்கியபடி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.