Singer SPB Memorial : இந்திய சினிமாவின் பிரபல பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தோடு வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். இவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொரோன வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 52 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரானாவில் இருந்து பூரணமாக குணமடைந்தார் SPB.. ஆனந்தக் கண்ணீரோடு எஸ்பிபி சரண் வெளியிட்ட தகவல்!
நேற்று சென்னையில் இருந்து இவரது உடல் தாமரைப்பாக்கம் கொண்டு செல்லப்பட்டு அவரது பார்ம் ஹவுஸில் நல்லடக்கம் செய்யப்பட்டது .
தமிழக அரசு அறிவித்தபடி 72 குண்டுகள் முழங்க காவல்துறையின் மரியாதையுடன் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மண்ணுக்குள் மறைந்தது.
இந்நிலையில் எஸ்.பி.பி மகன் சரண் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது, விரைவில் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி-க்கு நினைவிடம் ஒன்று கட்டப்படும். இதுகுறித்து ஒரு வாரத்தில் அதிகார்வ பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார்.