72 குண்டுகள் முழங்க மண்ணுக்குள் மறைந்துள்ளார் எஸ் பி பாலசுப்பிரமணியம்.
Singer SPB Funeral : இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள். இவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் குருணை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 52 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்னையில் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த இவரது உடல் தாமரைப்பாக்கம் கொண்டு செல்லப்பட்டு அவரது பார்ம் ஹவுஸில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்தபடி 72 குண்டுகள் முழங்க காவல்துறையின் மரியாதையுடன் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மண்ணுக்குள் மறைந்தது.