யாரும் பயப்பட வேண்டாம் என கூறி கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை சிம்ரன்.
Simran Take Corona Vaccine : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸின் இரண்டாவது அலை வரும் தாண்டவம் ஆடி வருகிறது. இந்த வைரஸ் தொற்று இருந்தால் இது மக்கள் தங்களை பாதுகாக்க கட்டாயம் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அரசு கூறி வருகிறது.
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல திரையுலக பிரபலங்கள் கொரானா தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்த வகையில் தற்போது நடிகை சிம்ரன் முதல்கட்ட கொரானா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.