செம்பருத்தி சீரியலில் இருந்து நடிகராக வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Shocking Update About Sembaruthi Serial : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் நாயகனாக கார்த்தி மற்றும் நாயகியாக ஷபானாவும் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தவர் ஜனனி அசோக் குமார். திடீரென விலக்கப்பட்டார். கால்ஷீட் பிரச்சனை காரணமாக தன்னை சீரியலில் இருந்து தப்பி விட்டதாக யூட்யூபில் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.
அதன்பிறகு இவர் அளித்த பேட்டி ஒன்றில் இந்த சீரியலில் இருந்து விலக வேண்டும் என்றால் கார்த்தி தான் முதலில் விலக வேண்டும். அவருக்கு படங்களில் நடிக்கத்தான் ஆசை. சீரியலில் நடிக்க கொஞ்சமும் ஆசை இல்லை என கூறினார்.
அவர் கூறியபடியே தற்போது இந்த சீரியலின் இருந்து நடிகர் கார்த்தி வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஹீரோயின் கமிட் செய்து விட்டு டிவி சேனல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கேட்டதற்கு இது பற்றி தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என தெரிவித்ததாக பேசப்பட்டு வருகிறது.