தன்னுடைய அப்பாவிடம் விஜய் பேசுவதில்லை என அவருடைய தாயார் ஷோபா தெரிவித்துள்ளார்.
Shoba Chandrasekhar Interview : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் மகனான இவர் விடாமுயற்சி தன்னம்பிக்கை காரணமாக இன்று தமிழ் சினிமாவில் நடிகராக இடம் பிடித்துள்ளார்.
தளபதி விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் அவருடைய இதை மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என தெரிவித்திருந்தார்.
அதற்கேற்றார்போல இரு தினங்களுக்கு முன் இவர் விஜய் மக்கள் இயக்கம் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. இதற்கு பொதுச்செயலாளராக எஸ் ஏ சந்திரசேகர் அவர்களும் பொருளாளராக ஷோபா சந்திரசேகர் அவர்களின் பெயரும் இடம் பெற்றது.
அக்கட்சி பிடித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவ தொடங்கியது விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் கட்சிக்குள் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்னுடைய ரசிகர்கள் இதில் இணைய வேண்டும் என தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் கட்சியும் ஆதாயத்திற்காக என் பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.
இதனையடுத்து பத்திரிக்கையாளர்கள் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களைச் சுற்றி வளைத்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால் அதற்கெல்லாம் அவர் எதுவும் கூறவில்லை. தனியா வந்து சொல்கிறேன் என்பதை மட்டுமே கூறினார். இதனால் சமூக வலைதளங்களில் தனியாக வாங்க சொல்கிறேன் என்ற டேக் சமூக வலைதளங்களில் இடம் பெற்று அவரை கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.
மேலும் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவர்கள் அளித்த பேட்டியில் தளபதி விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் என்னிடம் அசோசியேஷன் தொடங்க இருப்பதாக தான் கையெழுத்து வாங்கினார். அதன் பின்னர் கட்சி தொடங்கப் போவதாக கூறிய போது நான் கையெழுத்து போடவில்லை. தற்போது அந்த கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நான் விலகிவிட்டேன் கட்சியிலிருந்து விலகி விட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய் தன் அப்பாவிடம் அரசியல் பற்றி பேசவேண்டாம் என கூறியிருந்தார். ஆனால் இவர் அதை கேட்காமல் தொடர்ந்து அரசியல் குறித்துப் பேசிக் கொண்டே இருந்தால் விஜய் தன் அப்பாவின் பேசுவதையே நிறுத்திவிட்டார். இருவரும் பேசிக் கொண்டு பல காலம் ஆச்சு என தெரிவித்துள்ளார்.