தியேட்டரில் ரசிகர் ஒருவர் கைதி படத்தை முழுவதையும் செல்போனில் படம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் அஜித் படத்திற்கும் நடந்ததாக நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் பிகில்.
ரசிகர்கள் மத்தியில் இப்படம் அதிகமாக பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது, இந்த படத்துடன் கார்த்தியின் கைதி திரைப்படமும் ரிலீசானது.
இந்நிலையில் தியேட்டரில் படம் பார்த்த ரசிகர் ஒருவர் கைதி படத்தை முழுவதையும் செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இதனை பார்த்த பி.ஆர் ஓ ஒருவர் இதனை தடுத்து நிறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட சாந்தனுவும் ஒரு அதிர்ச்சிகர தகவலை கூறியுள்ளார்.
நான் தியேட்டரில் நேர்கொண்ட பார்வை படம் பார்த்து கொண்டிருந்த போதும் இதே போல் ஒருவர் படத்தை செல்போனில் படம் பிடித்தார். நான் அப்போது அவரை கண்டித்து இதனை தடுத்து நிறுத்தினேன் என குறிப்பிட்டுள்ளார்.
The same happened when I was watching NKP bro. Ivunungaluku kavalaye Illa ! One guy sitting two seats from me was happily shooting Nkp from censor card ! Initially I thought he’s a fan and shooting only high moments but he was shooting throughout ! I had to pull his phone myself
— Shanthnu ???? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) October 30, 2019