Shakeela About Expirience With Pugazh

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மொத்தமாக வெளியேற ஷகிலா முடிவெடுத்துக் கொண்டு நிகழ்ச்சிக்கு வர அதனை அப்படியே மாற்றியுள்ளார் புகழ்.

Shakeela About Expirience With Pugazh : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசன் பெரிய வெற்றியைப் பெற்றது தொடர்ந்து 2வது சீசன் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியும் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது.

இதில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றனர் ஷகிலா. இந்த நிகழ்ச்சியின் மூலமாக அவர் மீதான கண்ணோட்டம் முற்றிலுமாக மாறியது. பலரும் தற்போது அவரை அம்மா என அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல மணி நேரம் நின்று சமைப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்ததால் சில வாரங்களிலேயே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற முடிவு எடுத்துள்ளார். இதற்காக அவர் ஒரு திட்டம் தீட்டி நிகழ்ச்சிக்கு ஒருநாள் வந்துள்ளார்.

அப்போதுதான் முதன்முறையாக ஷகிலா மற்றும் புகழ் காம்பினேஷன் அமைந்தது. புகழ் சூடான உருளைக்கிழங்கில் கை வைத்து விரலை சுட்டுக் கொண்ட போது ஷகிலா வயிறு வலிக்க வலிக்க விழுந்து விழுந்து சிரித்தார். இந்தத் தருணம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட ஒன்றாக அமைந்தது.

இந்த சம்பவத்தினால் தான் ஷகிலாவும் தனது மனநிலையை மாற்றிக்கொண்ட நிகழ்ச்சியில் தொடர்ந்துள்ளார். இதனை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இதனை முதன் முதலாக அம்மா என அழைத்தது புகழ் தான் என கூறியுள்ளார். தனக்கு இந்த அளவிற்கு பெயர் கிடைக்க முக்கியமான காரணம் புகழ் மட்டும்தான் என தெரிவித்துள்ளார்.