எனக்கு கொரானா வைரஸ் பாதிப்பு உறுதியானது உண்மை தான் என செந்தில் வீடியோ ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
Senthil Speech About COVID19 : இந்தியாவில் கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய வைரஸ் தொற்று அதி தீவிரமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தற்போது இதன் இரண்டாம் அலை மீண்டும் தீவிரமாக பரவத் தொடங்கி உள்ளது. சாதாரண மக்களைப் போலவே திரையுலக பிரபலங்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.
நேற்று காமெடி நடிகர் செந்தில் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து செந்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எனக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டது உண்மை தான். பயப்பட வேண்டாம் நான் நலமுடன் உள்ளேன். ஏற்கனவே தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பெரியளவில் பாதிப்பு இல்லை என கூறியுள்ளார்.
மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், கொரானா தொற்று ஏற்பட்டால் பயம் வேண்டாம், தனிமையில் இருந்து சிகிச்சை பெறுங்கள், தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.