காரில் அரை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக செம்பருத்தி சீரியல் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
Sembaruthi Serial Actress Complaint : தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் உமா. இதே சீரியலில் பணிபுரிந்து வரும் சிலர் அம்மாவை ஆசை வார்த்தை காட்டி அவர்களின் ஆசைக்கு இணங்க வைத்துள்ளனர். இதனையடுத்து அவரை காரில் வைத்து அரை நிர்வாணப்படுத்தி மானபங்கம் செய்துள்ளனர்.
அவரை மட்டுமல்லாமல் அவருடைய தங்கையையும் இதேபோல் பாலியல் கொடுமை செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த உமா போலீசில் புகார் அளித்து எந்தப் பலனும் அளிக்கவில்லை. இதனால் அவர் பத்திரிகையாளர்களை அழைத்து முறையிட்டுள்ளார். நான் அடுத்த சித்ராவாகி விடுவேனோ என பேசியுள்ளார்.
செம்பருத்தி சீரியல் நடிகை இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.