Sembaruthi 13.11.18 : ஷியாம், அகிலா வீட்டில் பணிபுரியும் சிந்துவை காதலிக்கிறார்.
இவர்கள் இருவரும் அன்பாகப் பேசிக் கொண்டிருக்கும் போது வனஜாவும் , உமாவும் வந்து விடுகின்றனர்.
அகிலாவும் ஹாலிற்கு வந்து விடுகிறாள். அப்பொழுது, அவருக்கு ஒரு போன் கால் வருகிறது .அந்த போன் காலால், அகிலா கோபம் அடைகிறார்.
சிந்துவிடம் டிவி ஆன் செய்யும்படி கூறுகிறார். டிவியில் ஆதி அறிவித்த பிரான்ட் அம்பாசிடர் போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு வித்தியாசமான ஒரு பரிசை ஆதித்யா நிறுவனம் அறிவித்துள்ளனர் என்ற செய்தி வெளியாகிறது.
இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அருண் கையொப்பமிட்ட லெட்டர் பேடை டிவியில் காட்டுகின்றனர்.
இதனால் கோபமடைந்த அகிலா, அருணை அனைவரின் கண்முன்னே உடனே கண்ணத்தில் அறைந்து விடுகிறார்கள். அருண் அடிவாங்குவதை கண்ட மித்ரா மௌனமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த செய்தியை யார் டிவி சேனலுக்கு கொடுத்து இருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆதி கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது .
ஏனென்றால் தன்னுடைய காதல் விஷயத்தை
எப்படி அம்மாவிடம் கூறி சமாதானம் வாங்குவது என்று குழம்பிக் கொண்டிருந்தேன். தானாகவே ஒரு யோசனை அமைந்து விட்டது.
இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறுவது பார்வதி தான், அதுமட்டுமல்ல அகிலா வீட்டில் மூத்த மருமகள் பார்வதி மட்டும் தான் என்று ஷ்யாம் மற்றும் அருணிடம் கூறுகிறார் ஆதி.
பார்வதி போட்டியில் கலந்து கொள்வதற்காக தன் முகத்தில் ஃபேசியல் செய்து கொள்வதற்காக முல்தானி மட்டியில் ரோஸ் வாட்டரை கலந்து வைக்கிறாள்.
அப்போது ஐஸ்வர்யா அதில் சுண்ணாம்பை கலந்து விடுகிறார். இதனை அறியாத பார்வதி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருக்கிறாள்.
அப்போது அவ்வழியாக வனஜா போன் பேசிக் கொண்டு வருகிறார். வனஜா வருவது தெரியாமல் பார்வதி அவர் மீது தண்ணீர் தெளித்து விடுகிறார்.
இதனால் கோபமடைந்த வனஜா, முல்தானிமட்டி கலந்த பேஷ் பைக்கை தட்டி விடுகிறார். ஐஸ்வரியாவின் சதி திட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
பின்பு ,வனஜாவிடமிருந்து பார்வதியை காப்பாற்றி டிரெயினிங் கொடுப்பதற்காக ஆபீஸுக்கு அழைத்து செல்கிறார் ஆதி.
அப்பொழுது ,ஆதி காரின் முன் சீட்டில் பார்வதியை அமர செல்கிறாள். ஆனால் மித்ரா தடுத்து விடுகிறாள்.
பார்வதியை காரின் பின் சீட்டில் அமர சொல்லுகிறார் மித்ரா. ஆனால் ஆதி மித்ராவிடம் உன்னை யார் ஆபிசுக்கு அழைத்தது என்று கேட்கிறார்.
அதற்கு மித்ரா, பார்வதி காரின் முன் சீட்டில் அமரலாம் ,ஆபீசுக்கு வரலாம். ஆனால், நான் வரக்கூடாதா? என்கிறார்.
ஆமா நீ வரக்கூடாது !பார்வதிக்கு தான் அந்த உரிமை உள்ளது என்று ஆதி மித்ராவிடம் கூறுகிறார். மித்ரா பார்வதியின் கண் முன்னே அசிங்கப்பட்டு கூனிக் குறுகி நிற்கிறாள்.
நாளைய எபிசோட்டில் ஆதி , பார்வதிக்கு ஆபீஸில் ட்ரைனிங் கொடுப்பதில் சிக்கல் ஏற்படுமா? மித்ராவின் அடுத்த கட்ட சதி திட்டம் என்ன ? என்பதை நாளை பார்க்கலாம்.