Seenu Ramasamy Song About Doctor
Seenu Ramasamy Song About Doctor

நோயாளிக்கு சிகிச்சை அளிக்க போய் கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் குறித்து உருக்கமாக பாட்டு எழுதிய இயக்குனர் சீனு ராமசாமி

Seenu Ramasamy Song About Doctor : தேசிய விருது வென்ற இயக்குனர் சீனு ராமசாமி, மற்றவர்களுக்கு தன்னலமின்றி சிகிச்சை அளிக்கும் போது, கொரோனா தொற்றால் தன்னுயிரை இழந்த டாக்டரின் தகன நடவடிக்கைகள் தொடர்பான இதயத்தைத் துளைக்கும் சம்பவத்தால் தூண்டப்பட்டு, பாதிக்கப்பட்டு, எழுதியுள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு பணியில் இறங்கிய விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் – புகைப்படங்களுடன் இதோ

இந்த இரங்கற்பாடலை, தங்களின் பார்வைக்காக

கொரோனா

உமைக் காக்க
தொட்டுத் தூக்கிய
மருத்துவன் மாண்டான்

வாழவா வழி கேட்டான்
அந்தோ சிதை நெருப்பை
தானம் கேட்டான்

தர மறுக்கும்
மனித மனமே
நீ கைசுத்தம்
செய்தல் போல்
மனச்சுத்தம் செய்வாயா ?

சமபந்தி வைத்த வைத்தியனை
வைத்தெரிக்க கொள்ளி
இல்லையா..?

ஜாதி பார்த்தா
இனம் பார்த்தா
மொழி பார்த்தா
வந்து வேக வைக்கிறது
கிருமி..

இருமாமல்
துப்பி விடு
உன் ஜாதியை
உன் மதத்தை

அய்யோ
கிருமி மனித
இனத்தை தேடுகிறது.

சீனு ராமசாமி