சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த அரசியலில் ஒரு நாள் கூட தாக்கு பிடிக்க முடியாது என பேசியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.
Seeman About Rajinikanth Political Entry : தமிழ் சினிமாவின் இனி பெரும் நடிகர்களாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் அரசியலில் நுழைய திட்டமிட்டுள்ளனர்.
உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் மூலம் அரசியலில் என்ட்ரி கொடுத்து விட்டார்.
ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் அடுத்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என கூறி வருகிறார். ஆனால் இன்னமும் தன்னுடைய கட்சியின் பெயர் என்ன என்பது குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சு கிளம்பியதுமே சீமான் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் எப்போது நான் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன். வேறு ஒருவரைத் தான் நிறுத்துவேன் என கூறினாரோ அப்போதே எனக்கும் அவருக்கும் இடையேயான பிரச்சனை முடிந்து விட்டது.
அவர் இமயமலைக்கு சென்று கடவுள் வழிபாடு செய்யட்டும், பேரப்பிள்ளைகளை கொஞ்சட்டும். சினிமாவில் வேண்டுமானால் ரஜினியும் கமலும் சீனியராக இருக்கலாம். ஆனால் அரசியலில் நான்தான் சீனியர். பத்து வருடங்களாக நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ரஜினி அரசியலுக்கு வந்தால் ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்க மாட்டார். ஏனென்றால் அவர் அமைதியான மனிதர் எனவும் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் பயணம் குறித்து சீமான் இவ்வாறு தெரிவித்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.