சிபிசிஐடி போலீஸார் கைது செய்ய கிளம்பிய நிலையில் சாத்தான்குளம் எஸ் ஐ தப்பி ஓடியதாக கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Sathankulam SI Balakrishna Arrest : ஊரடங்கு நேரத்தில் செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததால் தந்தை-மகன் என இருவரை சாத்தான்குளம் போலீசார் அழைத்துச் சென்று இரவு முழுவதும் அடித்து கொடூரமாக கொலை செய்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி. இந்த நிலையில் சிபிசிஐடி போலீஸார் சாத்தான்குளம் SI பாலகிருஷ்ணாவை கைது செய்ய அவரின் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
இந்த தகவலறிந்த பாலகிருஷ்ணா தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். மேலும் செல்போன் இணைப்பை அணைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.
மேலும் காவலர் முருகன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.