சர்க்கார் கதை என்னுடையது என உதவி இயக்குனர் ராஜேந்தர் புகார் அளித்து இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு முருகதாஸ் தற்போது பதில் அளித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார்.
தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குனரான வருண் ராஜேந்தர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருந்தார்.
தற்போது இந்த குற்றச்சாட்டுக்கு முருகதாஸ் பதில் அளித்துள்ளார். ஒரு படம் எடுக்கிறோம் என்றால் அந்த படத்திற்கு பிரச்சனைகள் வருவது சகஜமான ஒன்று. இது என்னுடைய கதை என நான்கு பேர் வருவார்கள் சர்காருக்கும் அதே தான் நடந்தது.
இது சிவாஜி சாருக்கு நடந்தது, அவர் ஒருமுறை ஓட்டு போட சென்ற போது அவருடைய ஓட்டை யாரோ ஒருவர் பதிவு செய்திருப்பார்கள். அதை வைத்து தான் சர்க்கார் படத்தின் கதையை உருவாக்கினேன். இது முழுக்க முழுக்க என்னுடைய கதை என பதில் கொடுத்துள்ளார்.