Kaththi Issue : தளபதி விஜயின் சர்கார் படத்திற்கு எதிராக மீண்டும் ஓர் இயக்குனர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
சர்கார் படத்தின் கதை என்னுடையது. செங்கோல் என்ற பெயரில் நான் எழுதிய கதை என உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இறுதியாக முருகதாஸும் வருணும் சமரசமாக பேசி பிரச்னையை தீர்த்து கொண்டனர்.
அதே போல் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாக்கி இருந்த கத்தி படம் என்னுடையது. தாகபூமி என்ற பெயரில் நான் இயக்கிய குறும்படத்தின் கதை எனவும் கூறியிருந்தார்.
தற்போது இது என்னுடைய கதை தான் என முருகதாஸ் ஒப்பு கொள்ள வேண்டும் என மற்றொரு உதவி இயக்குனர் ஒருவர் குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வளையதளத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கு முருகதாஸ் என்ன விளக்கம் அளிப்பார் என்ற எழுந்துள்ளது.
அதே போல் கத்தி என்னுடைய கதை என அறம் பட இயக்குனரான யாக்கோபை நாயனாரும் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.