தமிழ் சினிமாவின் திறமையான முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். படத்தின் கதைக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல தன்னை மாற்றி கொள்ளும் அசாத்திய திறமை கொண்டவர்.

இவரது நடிப்பில் இறுதியாக ஹரி இயக்கத்தில் உருவாகி இருந்த சாமி ஸ்கொயர் படம் வெளியாகி இருந்தது.

இந்த படத்தின் மூலம் மூன்று வருடத்திற்கு பிறகு மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து இருந்தார் நடிகரும் விஜயின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ்.

இவர் சமீபத்தில் பிரபல இணையத்தை பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்திருந்த பேட்டியில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பல நடிகர்களை பற்றி பேசியுள்ளார்.

விஜய் என்னோட நெருங்கிய நண்பன். ஆனாலும் அவரை விடுங்க எனக்கு இன்னும் சூர்யா, அஜித்தோட நடிக்க வாய்ப்பு கிடைக்கல. இப்போதான் விக்ரமோட சேர்ந்து சாமி ஸ்கொயர் படத்துல நடிச்சேன். என்ன மனுஷங்க அவரு செம சிம்பிள் சாதாரணமாக தான் இருப்பார், நெருங்கியவர்கள் கிட்ட பேசுற மாதிரி சகஜமாக பேசுவார் என விக்ரமை புகழ்ந்து பேசியுள்ளார்.