தர்சனிடம் பேச முயன்ற போது அபிராமி சொன்ன வார்த்தையால் தான் ரொம்ப பாதிக்கப்பட்டதாக சனம் ஷெட்டி கண்ணீருடன் கூறியுள்ளார்.
தற்போது சமூக வளையதளங்களில் ஹாட் டாபிக்கே சனம், தர்ஷன் பிரச்சனை தான். இவர்கள் இருவரும் தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.
அப்படியாக சனம் ஷெட்டி அளித்த பேட்டி ஒன்றில் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு தர்ஷன் மற்றும் எனக்கும் அழைப்பு வந்திருந்தது.
விமானத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்த போது தர்ஷனிடம் நான் பேச முயன்ற போது அபிராமி பேச விடாமல் தடுத்தார், அவர்கள் மட்டும் பேசி கொண்டே இருந்தனர்.
நான் அபிராமியுடம் நான் உங்களை தோழியாக தான் நினைத்தேன், நீங்கள் எனக்கு உதவ வேண்டாம் எதற்காக இப்படி செய்கிறீர்கள் என கேட்டதற்கு உனக்கு மனநிலை சரியில்லை நல்ல மருத்துவரை பாரு , அப்புறம் அவனிடம் பேசு என கூறி என்னை காயப்படுத்தினார் என பேசியுள்ளார்.