Kaathuvakula Rendu Kadhal
நயன்தாராவுடன் நடிக்க ஒப்பு கொண்டதற்கான காரணத்தை சமந்தா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற பெயரில் உருவாக உள்ள இந்த படத்தில் சமந்தா, நயன்தாரா ஆகியோர் நாயகியாக நடிக்கின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் சமந்தா எப்படி நடிக்க ஒப்பு கொண்டார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்திருந்த நிலையில் தற்போது அதற்கு பதிலளித்துள்ளார்.

அதாவது விக்னேஷ் சிவன் கதை சொன்ன விதமும் என்னுடைய கதாபாத்திரமும் வித்தியாசமாக இருந்தது. விஜய் சேதுபதி, நயன்தாரா என இரண்டு திறமையான நடிகருடன் என்னுடைய திறமையை எந்த அளவிற்கு வெளிக்காட்ட முடிகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே நான் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.