பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய நடிகை சாக்‌ஷி அபிராமியை மறைமுகமாக தாக்கி கருத்து தெரிவித்துள்ளார்.

Sakshi Tweet About Abhirami : பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இறுதி வெற்றி போட்டியாளரை தேர்ந்தெடுக்க இன்னும் 2 வாரங்கள் மட்டுமே இருக்கிறது.

ஏற்கனவே, அபிராமி, சாக்‌ஷி, சரவணன் உள்ளிட்ட பலரும் வெளியேறி விட்டனர். நேற்று வனிதா விஜயகுமார் வெளியேறினார்.

Bigg Boss Abirami Interview Speech about Madhumitha Issue | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News

இந்நிலையில், சாக்‌ஷி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை சந்திப்பதால் எதிர்மறை கருத்துகள் பரவுகிறது.

எனவே, அதை நிறுத்துங்கள். நீங்கள் சந்திக்கும் போது செய்ய வேண்டிய பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் உங்களுக்கு உறுதுணையாக யார் இருந்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்’ என அவர் பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் அபிராமியே போட்டியாளர்களின் வீடுகளுக்கு சென்று வருகிறார். எனவே, அபிராமியைத் தான் சாக்‌ஷி மறைமுகமாக கூறுகிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.