ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான “சாமி” படத்தின் இரண்டாம் பாகமாக. விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபிசிம்ஹா,சூரி,பிரபு, டெல்லி கணேஷ், உமா ரியாஸ்கான், சுதா சந்திரன்,ஜான் விஜய், இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரமேஷ் கண்ணா, சிங்கமுத்து, கிரேன் மனோகர், டெல்லி கணேஷ், பாலாசிங், ஓஏ கே சுந்தர், உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் அதே ஹரி இயக்கத்தில் நடிக்க, “சாமி ஸ்கொயர்” என்ற பெயரில் இன்று வெளியாகியுள்ளது. இத்தப்படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் அய்யராத்து மாமியாக கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

சாமி படத்தின் முடிவில் பெருமாள் பிச்சை – கோட்டா சீனிவாச ராவை ஆறுச்சாமி – விக்ரம் எரித்து கொன்று விடுவார். ஆனால் ஊரைப் பொறுத்தவரை பெருமாள் பிச்சை தலைமறைவு, போலீஸ் வலைவீச்சு என்று படம் முடிந்து இருக்கும். அதன் தொடர்ச்சியாக ஆறுச்சாமியின் மகன் ராமசாமி – விக்ரம், டெல்லியில் தனது தாத்தா – டெல்லி கணேஷ், பாட்டி – சுமித்ரா இருவரது பாசகவனிப்பில் வளர்ந்து ஆளாகி, ஐபிஎஸ் ஆபிஸராகி, திருநெல்வேலிக்கே சிறப்பு ஐபிஎஸ் அதிகாரியாக வந்து பெருமாள் பிச்சை – கோட்டாவின். வாரிசுகள் பாபிசிம்ஹா, ஜான்விஜய், ஓ ஏ கே சுந்தர்… மூவரையும். தன் அப்பாவையும், அம்மாவையும் அநியாயமாக கொன்றதற்காகவும். அயோக்கியத்தனமாக பல காரியங்களை அரங்கேற்றி. திருநெல்வேலி ஜில்லாவையே கதிகலங்க செய்து வருவதாலும். தீர்த்து கட்டுவதாக இந்த “சாமி ஸ்கொயர்” படம் உருவாகி இருக்கிறது.

கதைப்படி, ஒருபக்கம், திருநெல்வேலியில் ரவுடியிசத்தை ஒழித்துக்கட்டிய ஆறுச்சாமி, தனது மனைவி ஐஸ்வர்யா ராஜேசுடன் (சாமியில் திரிஷா) தனது சொந்த ஊரான பழனிக்கு திரும்புகிறார். மறுபுறத்தில் பெருமாள் பிச்சையின் குடும்பத்தினர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். பெருமாள் பிச்சைக்கு ஓ.ஏ.கே.சுந்தர், ஜான் விஜய் மற்றும் பாபி சிம்ஹா என மூன்று மகன்கள் உள்ளனர். போலீசுக்கு பயந்து பாபியின் தந்தை பெருமாள் பிச்சை தலைமறைவாகி விட்டதாக பாபி சிம்ஹா ஏரியாவில் கிண்டல் செய்யப்படுகிறார்.

இதனால் வெகுண்டு எழும் பாபி, தனது அப்பா பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள திருநெல்வேலி வருகிறார். வந்த இடத்தில், திருநெல்வேலியையே தனது. அப்பா பாணியில் அலறவிடுகிறார். திருநெல்வேலியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அவர், ஆறுச்சாமிக்கும் – பெருமாள் பிச்சைக்கும் இடையே நடந்த மோதல் பற்றி தெரிந்து கொண்டு ஆறுச்சாமியை கொல்ல திட்டம் போடுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார்.

ஆறுச்சாமியுடன் காரில் வரும் அவரது நிறை மாத கர்ப்ப ஸ்த்ரி மனைவி ஐஸ்வர்யா ராஜேஷும் கொல்லப்பட, அவரது வயிற்றுு சிசு. மட்டும். காப்பாற்றப்படுுகிறது. ராமசாமி என்னும் பெயரில் வளரும் அந்த குழந்தையை ஆறுச்சாமியின் மாமானாரான டெல்லி கணேஷ் டெல்லிக்கு எடுத்துச் சென்று விவேக்கின் குழந்தையாக வளர்க்கிறார்.

கலெக்டராக வேண்டும் என்ற கனவோடு வளரும் ராமசாமி, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுகிறார். அதேநேரத்தில் மத்திய அமைச்சரான பிரபுவிடம் முக்கிய பொறுப்பிலும் பணியாற்றுகிறார். வெளிநாட்டில் படிப்பை முடித்துக் கொண்டு இந்தியா வரும் பிரபுவின் மகள் கீர்த்தி சுரேஷுக்கு விக்ரம் மீது காதல் வருகிறது.

இதற்கிடையே ஐ.ஏ.எஸ் தேர்வில், இந்திய அளவில், வெற்றி பெறும் ராமசாமி, ஐஏஎஸ் ஆக விரும்பாமல் ஐ.பி.எஸ் ஆக விரும்புகிறார்.

அவர். ஐ.பி.எஸ் ஆபிஸரானதும், திருநெல்வேலி மாவட்டத்தின் துணை கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்படுகிறார். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகும் டெல்லி கணேஷ், ராமசாமிக்கு அந்த வேலை வேண்டாம் என்று தடுக்கிறார்.

கடைசியில், ராமசாமி – விக்ரம். திருநெல்வேலிக்கு சென்றாரா? தனது தந்தை ஆறுச்சாமி பாணியில் போலீஸ் பணியை செவ்வனே செய்தாரா..? அயோக்கியர்கள் வேட்டையை அதிரடியாக தொடர்ந்தாரா? அப்பா ஆறுச்சாமி விக்ரம் – அம்மா ஐஸ்வர்யாவை தீர்த்து கட்டியவர்களை பழிதீர்த்தாரா..? இன்னும். என்னவெல்லாம் நடந்தது..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு, வித்தியாசமாகவும் விறு விறுப்பாகவும் பரபரப்பாகவும், படு கமர்ஷியலாகவும், அதிரடி ஆக்ஷனுடன் விடையளிக்கிறது “சாமி ஸ்கொயர்” படத்தின் மீதிக்கதையும், களமும்!

அப்பா, மகன் என இரு வித கெட்-அப்களில் சீயான் விக்ரம் ஆறுசாமியாகவும், ராமசாமியாகவும் திருநெல்வேலி, பழனி, டெல்லி, முசோரி… என எக்கச்சக்கமாக புகுந்து விளையாடியிருக்கிறார். ஆறுச்சாமி கதாபாத்திரத்தில் பழைய விக்ரமை பக்காவாக. பார்க்க முடிகிறது… என்றால், ராமசாமி கதாபாத்திரத்தில் போலீஸ் மிடுக்கு, முறுக்கு மீசை, விறைப்பான காக்கி டிரஸ்…. சகிதம் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற நவீன போலீசாக விக்ரம் படம் முழுக்க பலே, பலே… சொல்லும் அளவிற்கு பளிச் என பவனிவருகிறார்.

அதிலும், “கட்டுன பொண்டாட்டியா இருந்தாலும் வாம்மா, போமான்னு மரியாதையா பேசணும்….” என புரோகிதரக அதிரடி பண்ணும் இடத்தில் தொடங்கி, “உன் கையில பேனா இருக்கு ஆர்டர் போட…. என் கையில் துப்பாக்கி இருக்கு ஆள தூக்குறதுக்கு …ஐஏஎஸ் மூளை ஐபிஎஸ் வேலை… ” என்று அநீதிக்கு. துணைபோகு கலெக்டரிடம் மல்லு கட்டும் இடத்தில் தொடர்ந்து, கோயில் குள்ள துப்பாக்கி எடுத்துட்டு போகக் கூடாது… அப்போ அருவா எடுத்துட்டு போலாமா? என துப்பாக்கியையும், தொப்பியையும் வைத்து விட்டு வில்லனின் கோட்டைக்குள்ளேயே புகுந்து ஆட்களை தூக்குவது வரை… சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார். நான்.ஆறுச்சாமி இல்ல… ராமசாமி என இட்லியில் .பீர் ஊட்டாமல் மோர் ஊற்றி சாப்பிடும் காட்சியும் ஹாசம்!

அல்ட்ரா. மாடர்ன் அழகு. பெண்ணாக கீர்த்தி சுரேஷ் அம்சமாக, காதல், காதல், காதல்… இல்லையேல், சாதல்… எனும் ரீதியில் விக்ரமை சுற்றியே வலம் வருகிறார். கெஸ்ட் ரோலில், த்ரிஷா கேரக்டரில் அவருக்கு பதில் வரும் ஐஸ்வர்யா ராஜேஷும், பக்கா பர்பாமென்ஸ் காட்டியிருக்கிறார். பேஷ், பேஷ்!

அதிலும். கீர்த்தி, தன். அப்பாவின் பி.ஏ.வான காதலன் விக்ரமை காரை எடுக்கச் சொல்லி. ஆக்ரா போய், “இந்த லவ் ஆசையிலும் வேகத்திலும் வந்த லவ் இல்ல… உன்னுடைய கேர் அபெக்ஷன் பார்த்து வந்தது… “என உருகும் இடத்தில் ஆகட்டும். முசோரிக்கு. காதலனின் ஐ.ஏ.எஸ்.ட்ரையினிங் சென்டருக்கு…. ஹெலிகாப்டரில் போய் பிறந்த நாள் வாழ்த்துக் கூறி அசத்துவதிலாகட்டும். சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார்.

மெயின் வில்லன் பாபி சிம்ஹா, வெறித்திடும் பார்வையுடன் எதிராளியை எரித்தே விடும்படி மிரட்டுகிறார். இளமையான மற்றும் வயதான கெட்்-அப்களில் பாபி அசத்த லான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

சூரி, நாயகியின் தாய்மாமனாக தனது காமெடியால் முடிந்த அளவிற்கு ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

அதிலும், சூரி, “இங்க. இந்தியில பேச சொன்னா பேசலாம்…. சிரிக்க, அழ வெல்லாம் சொல்றாங்களே…” என புலம்பும் இடத்தில் ஆகட்டும், “தமிழ் நாட்டிலேயே தமிழனுக்கு தனித் தொகுதி கிடையாது… டெல்லியில வேணுமா?” எனவும், தமிழ் பேசணும் தமிழை வளர்க்கணும்.. ன்னு சங்கம் வச்சா போதாது.. தமிழை நல்லா படிச்சும் இருக்கணும் என தமிழ் தெரியாதமிழர்களை. நக்கலடிக்கும் இடத்தில் ஆகட்டும், பிராமண பாஷை பேசுவதிலாகட்டும் சகலத்திலும் ஜமாய்த்திருக்கிறார்.

ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர், பிரபு, டெல்லி கணேஷ், உமா ரியாஸ்கான், சுதா சந்திரன், ஜான் விஜய், இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரமேஷ் கண்ணா, சிங்கமுத்து, பயில்வான் ரங்கநாதன், பாலாசிங், கிரேன் மனோகர், உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கும் தங்கள் பாத்திரங்்களுக்கும் பலம் சேர்த்து இருக்கின்றனர்.

காலஞ்சென்ற ப்ரியன், வெங்கடேஷ் இருவரின் ஒளிப்பதிவில், இலங்கை. டெல்லி. திருநெல்வேலி, முசோரி… உள்ளிட்ட. பகுதிகளிலும் ராஜஸ்தான் பாலைவன பகுதியிலும் படம் பிடிக்கப்பட்டிருக்கும். காட்சிகள் பெரும் சிறப்பாக ரசிகனின் கண்களுக்கு விருந்தளித்துள்ளன.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், “அதிரூபனே”, “டர்னக்கா டக்குனக்கா…” “அம்மா அம்மா…” ஆகிய பாடல்கள் பெரிதாக ரசிக்கும் படியாக இருக்கிறது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்.

வழக்கம் போலவே கெட்டவர் பெருமாள் பிச்சை – நல்லவர். ஆறுச்சாமி, இந்த இருவரது குடும்பத்திற்கும் இடையே நடக்கும் மோதல் மற்றும் பழிவாங்குதலையே படமாக இயக்கியிருக்கிறார் ஹரி. அதில் ஹவாலா பண மோசடி, சென்ட்ரல். மினிஸ்டரின் மகள் கடத்தல் வில்லனின். சிலோன் ராஜ்ஜியம், திருநெல்வேலி ஜில்லா. அராஜகம். எல்லாம் கலந்து. தனது வேக, விவேக பாணியில், அதிரடி, காதல், காமெடி, சென்டிமெண்ட்… என அனைத்தும் ஆங்காங்கே தெளித்து ஜனரஞ்சக கலவையாக திரைக்கதையையும், காட்சியமைப்புகளையும் செம்மையாக உருவாக்கியிருக்கிறார். ஒரு படத்தின் தொடர்ச்சியை இரண்டாம் பாகமிக உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல… அதில் “சிங்கம்” ஹரி என்பதால் அதை சாமர்த்தியமாகவே செய்திருக்கிறார் இயக்குனர் ஹரி. சபாஷ்!

மேலும், “ஒப்பன் ஒட்டை பிரிச்சுதானா தென்காசி எம்.பி ஆனார்…. நீயும் ஓட்டை பிரிச்சு உள்ளே இறங்கு..”, “இங்க நடந்ததெல்லாம் ஒரு நாடகம்னு தெரியுது ஆனா, அவ மனசு நிஜம்”, “உலகத்துலேயே கொடுமையான விஷயம்.. மகனுக்கு அப்பன் கொல்லி போடுறது….. அதை விட கொடுமை பேரனுக்கு தாத்தன் கொல்லி போடுறது… “என்பது உள்ளிட்ட “பன்ச் “களம் இயக்குனர். பெயர் சொல்கின்றன பலே, பலே!

ஆக மொத்தத்தில், “சாமி ஸ்கொயர்’ – வழக்கம் போலவே ஹரி விக்ரம் கூட்டணியின் ‘அதிரடி ஆக்ஷன் பயர்!”

Rating: 3.5/5