தளபதி விஜய் பெயரில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது அது குறித்து பேசிய சந்திரசேகர் அவர்கள் புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
SA Chandrasekar Decision on Political Party : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். விரைவில் அரசியலில் ஈடுபடப் போகிறார் என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் தேர்தல் ஆணையத்தின் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற புதிய கட்சியை பதிவு செய்தார்.
இது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்யும் புதிய கட்சிக்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். செயலாளராக இந்தக் கட்சியில் பதிவு செய்யப்பட்டு இருந்த விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவர்களும் கட்சியிலிருந்து விலகிக் கொண்டார்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் கட்சி விவகாரத்தில் தொடர்ந்து எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கு சறுக்கல்கள் மட்டுமே ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் புதிய கட்சி தொடங்க முயற்சியை கைவிட முடிவு செய்துள்ளார்.
மேலும் அவர் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட பத்மநாபன், செயலாளராக நியமிக்கப்பட்ட ஷோபா சந்திரசேகர் ஆகியோர் விலகிக் கொண்ட நிலையில் பொதுச் செயலாளரான எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் கட்சியை தற்போதைக்கு வேண்டாம் என முடிவு செய்துள்ளார்.