ரித்விகா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் மெட்ராஸ், கபாலி, டார்ச் லைட் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரித்விகா. மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார்.
பிக் பாஸுக்கு பிறகு சமூக வளையதளங்களில் வித்தியாச வித்தியாசமாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரித்விகா தற்போது போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கைகளால் நெய்யபட்ட பட்டு புடவையை வித்தியாசமாக கட்டி கொண்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
இது ரசிகர்களை கவர்ந்து வந்தாலும் சிலர் புடவையை இப்படியா கட்டுவாங்க என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.