RTO Report About Chithra Suicide

சித்ராவின் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பு முனையாக ஆர்டிஓ விசாரணை அறிக்கை வெளியானது இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

RTO Report About Chithra Suicide : தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தொகுப்பாளினியாக தன் பயணத்தை தொடங்கிய சித்ரா படிப்படியாக வளர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தனியார் ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என ஆர்டிஓ விசாரணையில் தெளிவுபடுத்தி இருந்தனர்.

இதன் அடுத்த கட்ட விசாரணையில் சித்ராவின் ஹேண்ட் பேக்கில் 150 கிராம் கஞ்சா அடைக்கப்பட்ட சிகரெட் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சித்ராவிற்கு மதுப்பழக்கம் இருப்பதாக சித்ராவின் மாமனார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் சித்ராவின் குடும்பத்தினர் எந்த ஒரு பழக்கமும் இல்லை என தெரிவித்து இருந்தனர்.

சித்ராவிற்கு போதை பொருள் வாங்கிக் கொடுத்தது யார்? என்றும் சித்ராவின் கணவர் தான் போதைப் பொருள் வாங்கிக் கொடுத்தாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

இதனால் சித்ராவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.