Roja Serial Arjun Interview

ரோஜா சீரியல் நடிக்கும் கடைசி சீரியல் எனக்கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் இந்த சீரியலில் நாயகன் அர்ஜூன்.

Roja Serial Arjun Interview : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று டிஆர்பியில் ஒரு முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. ‌‌

இந்த சீரியல் நாயகனாக நடித்து வருபவர் சிபு சூரியன். சிபு பொதுவாக மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவர் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரோஜா சீரியல் தான் நான் நடிக்கும் கடைசி சீரியல் என கூறியுள்ளார்.

சீரியலில் நடித்ததன் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். என்னை மேம் படுத்திக் கொண்டேன். கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக ரோஜா சீரியலில் நடித்து வருகிறேன். இனி எந்த சீரியலிலும் நடிக்க போவதில்லை. OTT மற்றும் படங்களில் கவனம் செலுத்த உள்ளேன். சீரியலை விட படங்கள் ஆபத்தானவை, கடினமானவை என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் அவர்களை எதிர்கொள்ள உள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் கன்னடத்தில் இயக்குனர் இசையமைப்பாளருமான ஹம்சலேகா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறேன். இந்தப் படம் பற்றி இப்போதைக்கு என்னால் எதையும் கூறமுடியாது. ஆனால் அதில் அரசியல்வாதியாக நடிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.