வெறும் நான்கு ரூபாய்க்கு தரமான உணவு கொடுத்து மக்களின் பசியை ஆற்றி வருகிறார் பிரபல நடிகை.
Roja Provides Food to People : தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை ரோஜா. இவர் தற்போது ஆந்திராவின் நெகிரி பகுதியின் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கிப் போயுள்ளது. மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
ஆந்திரா பகுதியில் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு தன்னுடைய டிரஸ்டின் மூலமாக வெறும் 4 ரூபாய்க்கு தரமான உணவு வழங்கி வருகிறார் ரோஜா.
மேலும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகவே ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார் ரோஜா. இவரின் இந்த முயற்சி மக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.