எனக்கு அந்த இரண்டு நடிகர்கள் மீது தான் க்ரஷ் என ஓபனாக கூறியுள்ளார் ரித்விகா.
தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் மெட்றாஸ் படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார் ரித்விகா.
இன்னும் சில படங்களில் நடித்த இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு வெற்றியாளரானார்.
பிக் பாஸுக்கு பிறகு இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு என்ற படத்தில் நடித்திருந்த ரித்விகா இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அந்த பேட்டியில் தமிழ் சினிமாவில் உங்களுக்கு யார் மீதாவது க்ரஷ் ஏற்பட்டு இருக்கா என கேட்க டக்கென எனக்கு விஜய் சேதுபதி மேல தான் க்ரஷ், அதுமட்டுமில்லாமல் ஜெயசங்கர் மீதும் க்ரஷ் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.