Reason Behind Vj Chithra Suicide

பாண்டியன் ஸ்டோர் சித்ரா தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து அரசல்பரசலாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

Reason Behind Vj Chithra Suicide : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்தவர் சித்ரா.

இவர் இன்று அதிகாலை 4 மணியளவில் பூந்தமல்லி அருகே உள்ள 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தங்கியிருந்த ஹோட்டலில் அவருடன் அவருடைய வருங்கால கணவர் ஹேம்நாத் அவர்களும் தங்கி இருந்ததாக தகவல் வெளியானது.

மேலும் சித்ரா தான் குளிக்க போவதாக கூறி ஹேமநாத்தை வெளியே அனுப்பியதாகவும் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஹோட்டலில் ஊழியருடன் மாற்று சாவியைக் கொண்டு திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கி இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கடந்த ஒரு வாரமாகவே ஹேம்நாத் மற்றும் சித்ராவிற்கும் இடையே பிரச்சனைகள் சென்று கொண்டிருந்ததாகவும் நள்ளிரவில் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதால் அதன்பின்னரே சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் போலீசார் சித்ராவின் வருங்கால கணவர் ஹேம்நாத் அவர்களிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.