சிவகுமார் 15 வருடங்களாக நடிக்காமல் இருப்பதற்கு காரணம் ஒரு நடிகை தான் என தெரியவந்துள்ளது.
Reason Behind Sivakumar Quit From Cinema : தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் சிவகுமார். சூர்யா, கார்த்தி ஆகியோரின் தந்தை ஆவார்.
இவர் எம்ஜிஆர், ரஜினி காலத்திலிருந்தே படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாகவும் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் பக்தி படங்களிலும் நடித்துள்ளார்.
திரையுலகில் பல வருட அனுபவம் பெற்ற இவர் சின்னத்திரை சீரியல் ஒன்றில் எமோஷனல் காட்சி ஒன்றில் நடித்ததைப் பார்த்து அங்கிருந்த நடிகை ஒருவர் ஏளனமாக சிரித்துள்ளார்.
இதனால் அந்த சூட்டை முடித்து விட்டு நடிகையிடம் சென்று சத்தமிட்டு உள்ளார். இதனையடுத்து அந்த இயக்குனரும் நடிகைக்கு ஆதரவாக பேசியதால் அங்கிருந்து கோபத்துடன் வெளியேறி உள்ளார்.
இனி நான் நடிக்க மாட்டேன் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார். அவர் கூறிய படியே 15 வருடங்களாக திரையுலகை விட்டு அவர் தள்ளியே இருந்து வருகிறார். சின்னத்திரை சீரியல், வெள்ளி திரைப்படம் என அவர் எதிலும் நடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை சிவகுமார் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் அவர்கள் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.