Reason Behind Chithra Suicide

சித்ராவின் தற்கொலை திடீர் திருப்பமாக போலீசார் வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Reason Behind Chithra Suicide : தமிழ் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் முல்லை. இவர் இரு தினங்களுக்கு முன்னர் மனவுளைச்சல் காரணமாக அங்கிருந்த 5 ஸ்டார் ஹோட்டல் வீட்டல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருடைய தற்கொலை சின்னத்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்ன? இது தற்கொலை அல்ல கொலை என பல்வேறு தரப்பினர் கூறி வந்தனர்.

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போலீசார் சித்ராவின் தற்கொலைக்கு அவருடைய கணவர் மற்றும் அம்மா தான் காரணம் என தெரிவித்துள்ளனர்.

சித்ராவின் கணவன் குடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் தகராறு செய்துள்ளார். இது தொடர்கதையாகவே சித்ராவின் அம்மா அவனை விட்டு பிரிந்து வந்துவிடு, அவனுடன் வாழ தேவையில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.