சூர்யாவுடன் ஜோடி நடிக்க இருந்த திரைப்படத்தை இயக்குனர் கைவிட்டதால் நடிகை ஹரி மீது கோபத்தில் உள்ளார்.
Rashi Khanna Angry on Hari : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் படத்தின் கதை சூர்யாவுக்கு பிடிக்காததால் இந்த பட வேண்டாம் என கூறிவிட்டார்.
இதனால் ஹரி அவர்கள் அருண் விஜய்யை வைத்து இந்த படத்தின் கதையை இயக்கி வருகிறார். சூர்யாவுடன் நடித்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி விடலாம் என்ற கணக்கில் இருந்த ராஷி கண்ணா ஹரி மீது பயங்கர கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.