ரம்யா பாண்டியன், சோம் சேகர் ஆகியோரின் திருமணத்திற்கு ஓகேவா என்பது குறித்து ரம்யா பாண்டியன் குடும்பத்தார் பதிலளித்துள்ளனர்.
Ramya Family About Som Sekhar : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள சோம் சேகர் ரம்யா பாண்டியன் மீது காதல் வயப்பட்டு உள்ளார். இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்து வருகிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் பீரிஸ் ஸ்கின் போது சென்ற ரம்யா பாண்டியன் சகோதரர் சோம் சேகரை மச்சான் என அழைத்து அவரை ஆச்சரியப்படுத்தினார்.
மேலும் ட்விட்டர் பக்கத்தில் சோம் சேகர் செம ஜெல்லான பர்சன் என பரசு பாண்டியன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் அவர்களின் திருமணத்திற்கு உங்களுக்கு ஓகேவா என கேட்டதற்கு அதனை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் ரம்யா பாண்டியனின் சகோதரி சுந்தரி பாண்டியனிடம் கேட்டதற்கு ரம்யாவின் முடிவுதான் இறுதி முடிவு என தெரிவித்துள்ளார். இதனால் ரம்யா பாண்டியனுக்கு ஓகே என்றால் சோமை எங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்பது போல ரம்யாவின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.