அரசியல் வருகையில் புதிய திருப்பமாக ரஜினிகாந்த் புதியதொரு முடிவை கையில் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Rajinikanth New Decision on Political Entry : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் அரசியலில் ஈடுபட இருப்பதாக தொடர்ந்து பேசப்பட்டும் எதிர்பார்க்கப்பட்டும் வந்தது.
இந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் தற்போது ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ரசிகர்களும் இனி எல்லாரும் இதை வைத்தே கிண்டலடிப்பார்களே என புலம்பி வருகின்றனர்.
இப்படியான நிலையில் தான் ரஜினி புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் கிளம்பி உள்ளது.
அதாவது ரஜினி அரசியல் கட்சியை தொடங்குவார். ஆனால் அவர் ஈடுபட மாட்டார். அரசியல் வாரிசாக தன்னுடைய மருமகன் என தனுஷை அறிவிப்பார்.
தனுஷ் மூலமாக தமிழக மக்களுக்கு செய்ய ஆசைப்படுவதை செய்வார் என கூறி வருகின்றனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.