Rajinikanth Latest Speech
பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா எழுதிய புறநானூற்று புதிய வரிசை வகை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

Rajinikanth Latest Speech : இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நாடாளுமன்ற திமுக உறுப்பினர் திருச்சி சிவா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், இமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராமசுப்பிரமணியன் நடிகர் சிவகுமார்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், புறநானூற்றை படிப்பதற்காக தன்னுடை நூலகத்தில் வைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் இந்த விழாவில் திருச்சி சிவா, ஸ்டாலின் முதலமைச்சர் ஆனவுடன் இந்த நூல் நூலகங்களில் வாங்கப்படும் என்று தெரிவித்தவுடன் அமைச்சர் பதறிபோய் தற்போதே நூல்களை வாங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்ததாக தெரிவித்தார். இதனால் விழாவில் சிரிப்பொலி ஏற்பட்டது..

நிறைவாக நன்றி தெரிவித்த சாலமன் பாப்பையா, எளிமை எளிமை எளிமை எத்தனை உயரம் சென்றாலும் எளிமை படியுமாம் என்றும் பெருமை என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாய் ரஜினிகாந்த் விளங்குவதாக சாலமன் பாப்பையா புகழாரம் சூட்டினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.