ரஜினியின் மக்கள் மன்றத்திலிருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Rajini Makkal Mandram Message to Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் பொறுப்பை ராஜினாமா செய்து தாங்கள் விரும்பும் வேறு எந்த கட்சியுடனும் இணைந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அனைவரும் அன்புத் தலைவரின் ரசிகர்கள் தான் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினி மக்கள் மன்றத்தின் இந்த அறிக்கையை ரசிகர்கள் ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.