தெரு தெருவாக அலைந்தவர்களை வீட்டிற்கு அழைத்து உதவி செய்துள்ளார் பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ். அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இயக்குனராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். தன்னுடைய சொந்த செலவில் இருந்தும் அறக்கட்டளை மூலமாகவும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் குடும்பம் ராகவா லாரன்ஸை தேடி சென்னை வந்துள்ளது, ஆனால் அவருடைய வீடு தெரியாததால் எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பார்மில் வசித்து வந்துள்ளனர்.
ராகவா லாரன்ஸின் மகளா இது? முதல் முறையாக இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!
இந்த தகவல் அறிந்த லாரன்ஸ் அவர்களை வீட்டிற்கு அழைத்து உபசரித்துள்ளார். மேலும் அந்த சிறுவனுக்கு தேவையான மருத்துவ செலவை கவனித்து கொள்வதாகவும் தன்னால் முடியாத பட்சத்தில் அறக்கட்டளையில் இருந்தோ அரசங்கத்திடமோ உதவி கேட்டு செய்து தருவதாக வாக்கு கொடுத்துள்ளார்.
நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் அவர்களின் முகவரி தெரியாமல் கடந்த முன்று நாட்களாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தவித்த குடும்பம் பற்றிய செய்தி நாளிதழல்களில் வந்த தகவலையடுத்து இன்று தனது இல்லத்திற்கு அழைத்து அவர்களை சந்தித்தார் ராகவா லாரன்ஸ் அவர்கள். pic.twitter.com/QOo9MFdGBM
— JSK.GOPI???? (@JSKGopi) July 16, 2019