நடிகர் ராகவா லாரன்ஸ் கொரானா நிதியாக 3 கோடி கொடுத்துள்ளார்.
Raghava Lawrence Contribution to Fight Against Corona : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7000 ஐ நெருங்கி வருகிறது.
திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்த வைரஸ் காய்ச்சலில் இருந்து மக்களை காப்பாற்ற பிரதம மந்திரி மற்றும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்னர் தல அஜித் பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்சமும் முதல்வரின் இவர்கள் நிதிக்கு 50 லட்சமும் பெப்ஸி யூனியனுக்கு 25 லட்சமும் அளித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் பிரதமரின் நிதிக்கு 50 லட்சம், முதல்வரின் நிதிக்கு 50 லட்சம், பெப்சி யூனியனுக்கு 50 லட்சம், நடன இயக்குனர்கள் சங்கத்திற்கு ஐம்பது லட்சம் கொடுத்துள்ளார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 25 லட்சமும் ராயபுரத்தில் உள்ள தினக்கூலிகளுக்கு ரூபாய் 75 லட்சம் என மொத்தம் ரூபாய் 3 கோடி நிதியாக அளித்துள்ளார்.
— Raghava Lawrence (@offl_Lawrence) April 9, 2020