Raghava Lawrence Contribution to Cleaning People
Raghava Lawrence Contribution to Cleaning People

கரோனா நிவாரண நிதியாக 3 கோடி கொடுத்ததை தொடர்ந்து மீண்டும் உதவியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

Raghava Lawrence Contribution to Cleaning People : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி நாளுக்குநாள் அச்சத்தை அதிகப்படுத்தி வருகிறது.

இந்த வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாக்கவும் இதனை எதிர்த்துப் போரிடவும் மத்திய மாநில அரசுக்கு திரையுலக பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

மாஸான பிளானுடன் தளபதி விஜய்.. கொரானாவுக்காக இத்தனை கோடி கொடுக்க போகிறாரா? வெளியான ஷாக் தகவல்

நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களும் மத்திய அரசு, மாநில அரசு, சினிமாத்துறை, மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் ஆகியோருக்கு ரூபாய் 3 கோடி நிதி அளித்திருந்தார்.

இருப்பினும் இன்னும் என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம் நான் செய்வேன் என கூறியிருந்தார். அவர் கூறியது போலவே இன்னும் ரூபாய் 25 லட்சத்தை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

இதனால் ராகவா லாரன்ஸுக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.