ragava

ஒரு அனாதை குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளுங்கள் என மறைந்த குழந்தை சுர்ஜித்தின் பெற்றோருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து காப்பாற்ற முடியாமல் குழந்தை சிறுவன் சுர்ஜித் மரணமடைந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் இழப்பிற்கு தமிழகமே இரங்கல் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், நடிகரும் ,இயக்குனருமான் ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

surjith

சுர்ஜித் மீண்டும் வருவான் அவனது பெற்றோருக்கு எனது வேண்டுகோள்

குழந்தை சுர்ஜித் மரணத்தால் இன்று அக்டோபர் 29 எனது பிறந்தநாளை கொண்டாட மனம் வரவில்லை. ஒட்டு மொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டு சென்று விட்டான் சுர்ஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது.

இந்நிலையில், சுர்ஜித்தின் பெற்றோருக்கு சொல்ல விரும்புவது..சுர்ஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். அதுபோல இந்த தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுர்ஜித் எனப்பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன். அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்க்கை கொடுத்ததாக இருக்கும், சுர்ஜித்தின் ஆத்மா சாந்தியடையும். சுர்ஜித்தும் தங்களுடனே இருப்பான்..

அப்படி நீங்கள் குழந்தையை தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையை தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்.

என பதிவிட்டுள்ளார்.