பாடகர் SPB-யின் குரல் மீண்டும் ஒலிக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார் ராதாரவி.
Radha Ravi About SPB : தென்னிந்திய சினிமாவில் முன்னணி பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ்பிபி. இதுவரை இவர் பல ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
வெறும் பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
கடந்த வாரம் இவர் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று எஸ்பிபியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது ரசிகர்களையும் ஒட்டுமொத்த இந்திய திரை உலகத்தையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ICU-ல் உள்ள SPB-யின் தற்போதைய நிலை என்ன?? குடும்பத்தினர் வெளியிட்ட முக்கிய தகவல்
திரையுலக பிரபலங்கள் பலரும் எஸ்பிபி அவர்கள் விரைவில் பூரண குணம் பெற வேண்டும் என இறைவனை வேண்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல நடிகரான ராதாரவி தமிழர்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ரொம்ப பிடித்தமான ஒரு பாடகர். நிறைய பேருக்கு அவருடைய குரல் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.
அந்தக் குரல் மீண்டும் நமக்காக ஒலித்து, நமது அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என உறுதியாக நம்புகிறேன். அவர் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
எஸ்பிபி நண்பரும் இசையமப்பாளருமான இளையராஜா எழுந்துவா பாலு என உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.