Rachitha Request to Media on Chithra Suicide

நடிகை சித்ரா குறித்து தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ரட்சிதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Rachitha Request to Media on Chithra Suicide : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி பல்வேறு சேனல்களில் பணியாற்றி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து வந்தவர் சித்ரா.

முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் இவருக்கு ஹேமந்த் ரவி என்பவருடன் இரு மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம அதன் பின்னர் ரகசியமாக பதிவு திருமணம் நடைபெற்றது.

இப்படியான நிலையில் கணவர் கொடுத்த தொடர் தொல்லை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவருடைய கணவர் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இப்படியான நிலையில் சித்ராவின் மாமனார் சித்ராவிற்கு திருமணத்திற்கு முன்பாகவே மூவருடன் தொடர்பு இருந்தது. அவருக்கு குடி பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆனால் ரசிகர்கள் சித்து அப்படிப்பட்டவர் இல்லை என கூறி வந்தனர்.

இப்படியான நிலையில் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சித்தா வீடியோ ஒன்றை வெளியிட்டு சித்ரா இறந்துவிட்டார். இனியும் அவரைப்பற்றி தவறாக பேச வேண்டாம். இறந்து போன ஒரு பெண்ணின் மீது அபாண்டமாக பழி போடாதீர்கள் என கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.