Puducherry CM Thanks to Vijay
Puducherry CM Thanks to Vijay

விஜய்க்கு மட்டும்தான் பொறுப்பு இருக்கா என்ன மற்ற நாடுகளில் நிதி அளிக்க வேண்டும் என கூறியுள்ளார் புதுச்சேரி முதல்வர்.

Pondicherry CM Thanks to Vijay : இந்தியாவில் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மே மாதத்தில் மீண்டும் கொரானா தாக்கம் உச்சம் பெறும் என சில ஆய்வு முடிவுகள் வெளியாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதிலிருந்து மக்களை காக்க பிரபலங்கள் பலரும் நிதி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தளபதி விஜய் அவருடைய பங்கிற்கு ரூபாய் 1.30 கோடி கொடுத்து இருந்தார்.

நீயா வந்துடு இல்லனா வீட்டுக்கு வந்து தூக்கிடுவேன் – லாஸ்லியாவை கடத்த திட்டம் போடும் ரசிகர் ( புகைப்படங்களுடன் இதோ )

இந்தத் தொகையை மத்திய அரசு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி என அத்தனை மாநிலங்களுக்கு பிரித்து கொடுத்திருந்தார்.

இதுகுறித்து பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோவில் நிதி கொடுத்து உதவிய விஜய்க்கு நன்றி கூறியுள்ளார்.

பாண்டிச்சேரியில் ஷூட்டிங் நடத்துவதற்கான சூழ்நிலைகள் ஏதுவாக இருப்பதால் பல நடிகர்கள் இயக்குனர்கள் இங்கு வந்து படம் எடுக்கிறீர்கள். ஆகையால் பாண்டிச்சேரிக்கு உதவ வேண்டிய கடமை உங்களுக்கும் உள்ளது.

பாண்டிச்சேரி மாநிலத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டிய செலவுகள் உள்ளனர் ஆகையால் நடிகர்கள் தாராளமாக உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் கொரானா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு அவர் நன்றி கூறியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.