bank strike

பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

பல்வேறு பொதுத்துறை வங்கிகள் ஒன்றாக இணைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. எனவே, இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் நாளை செயல்படாது.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் வங்கிகள் ஸ்டிரைக் அறிவித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.