PT Selvakumar Ko Pooja
மழை வேண்டி கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக தயாரிப்பாளர் பி. டி செல்வகுமார் 108 பசுக்களை வைத்து கோ பூஜை நடத்தியுள்ளார்.

PT Selvakumar Ko Pooja : தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக தளபதி விஜயின் நம்பிக்கைக்குரிய ஒருவராக வலம் வருபவர் பி.டி செல்வகுமார்.

இவர் கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இதனால் மழை வேண்டி சிறப்பு பூஜை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அதன்படி நேற்று மாலை காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள கீழவலம் என்ற பகுதியில் 108 பசுக்களை வைத்து கோ பூஜை நடத்தினார்.

40,000 நடுத்தர மக்களின் உரிமையை பறித்த அதிகாரிகள் – கலெக்டரிடம் முறையிட்ட பி.டி செல்வகுமார்.!

இந்த பூஜையில் அந்த பகுதியை சேர்ந்த 108 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர். பசுக்களுக்கு பசும் புல், அகத்தி கீரை, வைக்கோல் ஆகியவை வழங்கப்பட்டு மஞ்சள் குங்குமம் வைத்து மாலை அணிவித்து ஐதீக முறைப்படி பூஜை நடத்தப்பட்டது.

இந்த பூஜையை தலைமை தாங்கி நடத்திய கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி செல்வகுமார் பேசிய போது கடந்த வருடமே மழை இல்லை. இந்த வருடமும் மழை இல்லை என்றால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.

உலகத்திலேயே மழைக்கான சிறந்த பூஜை கோ பூஜை. அதனால் தான் மக்களின் நலனுக்காக இப்படியொரு பூஜையை ஏற்பாடு செய்தேன்.

பூஜை சிறப்பாக நடந்ததில் மிக்க மகிழ்ச்சி. நம்முடைய வேண்டுதலின் படி மழை பெய்தால் அது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் என பேசினார்.

இதே போல அனைத்து ஊர்களிலும் ஆன்மீக பூஜை நடத்தினால் நன்றாக இருக்கும் என கூறினார். அவர் பேசியபடியே பூஜை நடந்த சில மணி நேரங்களில் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது மக்களை ஆச்சரியப்பட வைத்திருந்தது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.