சைக்கோ படத்திற்கு தடை கேட்டு பைனான்சியர் ஒருவர் தொடர்ந்திருந்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம் புலி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ.
வரும் ஜனவரி 24-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் பைனான்சியர் ஒருவர் மிஸ்கின் ஏற்கனவே இப்படத்திற்கு பணம் வாங்கி விட்டு உதயநிதியை வைத்து படம் இயக்கி விட்டார். இதனால் சைக்கோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று மாலை 3 மணியளவில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் படத்தின் ரிலீசுக்கு தடை இல்லை, இதற்கு முன்பாகவும் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால் இயக்குனர் மிஸ்கின் பழைய தயாரிப்பாளருக்கு நாளை மறுநாளுக்குள் குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
#Psycho Release-க்கு தடையா..? உண்மை நிலவரம்…! https://t.co/OeYpazODBz#PsychoIn3Days #udhaystalin #Mysskin #NithyaMenon #AditiRaoHydari #PsychoVerdict #UdhayanidhiStalin #Mysskin @SevenSri #Ilayaraaja #DoubleMeaningProduction
— Kalakkal Cinema (@kalakkalcinema) January 21, 2020